மாநில அரசு அறிவிப்பு:
- கொரோனா பரவல் மீண்டும் தீவிரம் அடைவதால் ஒடிசா மாநிலத்தில் ஜூலை 16 வரை நடத்த திட்டமிட்ட அனைத்து தேர்வுகளையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைகின்றன.
- எனினும் புதிய தகவல் மற்றும் மறு அறிவிப்பு தொடர்பான தகவல்களுக்காக OSSC வலைதளத்தை அடிக்கடி பார்வையிட வேண்டும் என தேர்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 5 வரையில் நடத்தப்படவுள்ள தேர்வுகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றங்களையும் தேர்வு ஆணையம் அறிவிக்கவில்லை.
தேர்வு ஒத்திவைப்பு:
- இதேபோல், ஜூலை 6 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட ஜூனியர் அசிஸ்டென்ட் பதவிக்கான தேர்வும்,
- ஜூலை 8 ஆம் தேதி நடைபெற இருந்த தொழில்துறை ஊக்குவிப்பு அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வும்,
- ஜூலை 14 ஆம் தேதி நடத்த இருந்த உதவி அறிவியல் அலுவலர் பதவிக்கான முக்கிய எழுத்துத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் குறித்த மேலும் விவரங்களை அறிந்து கொள்ள ossc.gov.in என்ற வலைதளத்தில் பார்க்கவும்.
- தேர்வுக்கான அட்டவணை கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!