10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சான்றிதழ்களில் பிழை திருத்தங்கள் இருந்தால், அது குறித்து, மாணவர்களிடம் உரிய ஆவணங்களை அனுப்புமாறு அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சான்றிதழில் திருத்தம்:
தற்காலிக சான்றிதழில் பதிவுகள் சரியாக இருந்தால், அந்த நகலுடன், அசல் சான்றிதழ் நகலையும் இணைத்து அனுப்ப வேண்டும்.தேர்வரின் பிறந்த தேதி, இனிஷியல், தமிழ், ஆங்கில மொழிகளில் பெயர் திருத்தங்கள் போன்றவற்றில் மாற்றம் இருந்தால், மாற்று சான்றிதழின் தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட்ட நகலை இணைத்து அனுப்ப வேண்டும்.
தந்தை அல்லது தாயின் பெயரில் திருத்தங்கள் இருந்தால், தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட ஆளறி சான்றிதழ் என்ற, ‘போனபைடு’ சான்றிதழ் இணைத்து அனுப்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!