இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரேநாளில் 1.31 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!
இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,31,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 1,30,60,542 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9,79,608 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.