திண்டுக்கல் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.12.2020 முதல் 15.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
இதில் கிராம உதவியாளர் பணிக்கு 5 காலிப்பணியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:
கொல்லப்பட்டி கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த (பி.சி.யில்,முஸ்லீம் அல்லாதவர்) (பெண்கள்) விண்ணப்பிக்கலாம். குட்டம் கிராமத்திற்கு பொதுப்பிரிவினைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினர்(சி மற்றும் டி பிரிவு) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேல்வார்கோட்டை கிராமத்திற்கு எஸ்.ஸி பிரிவில் (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பிரிவில் அருந்ததியினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தென்னம்பட்டி கிராமத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் (ஆண் /பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இராமநாதபுரம் கிராமத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த (பி.சி.யில்-முஸ்லீம் அல்லாதவர்) (ஆண்/பெண்) இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் கிராம உதவியாளர் பணிக்கு 01.07.2020 அன்று குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்கள் கிராம உதவியாளர் பணிக்கு சம்பளம் பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
தேவையான சான்றிதழ்கள்:
கல்வித்தகுதி
இருப்பிடச் சான்று
வயது
சாதி
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 04.12.2020
கடைசி தேதி: 15.12.2020
பணியிடம்:
திண்டுக்கல், தமிழ்நாடு.
Important Links:
Notification link: Click Here!