இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி தொடக்கம்!!

இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் பல பேர் பயன்பெறுகின்றன.

தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆங்கில மொழி பயிற்சி என அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகரிக்கப்படுவதால் பெற்றோர்களும், மாணவர்களும் தங்கள் கவனத்தை அரசுப் பள்ளிகளில் சேர விரும்புகின்றனர்.இச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும்.

எந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க முடியும்?

ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயன்பெறமுடியும்?

வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆர்டிஇ இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
  • வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Leave a Comment