கல்லூரி கல்வி இயக்குனர் அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடத்த உயர்கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதனை தொடர்ந்து எளிமையான வினாத்தாள் வடிவமைக்க கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
எளிய வினாத்தாள்:
கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்துமாறு கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுக்கு வழங்கப்படும். வினாத்தாளை எளிதான முறையில் வடிவமைக்குமாறு கல்லூரி கல்வி இயக்குநர் அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தியுள்ளார். அதனால் மாணவர்கள் சிரமமின்றி இந்த நேரடி பருவத் தேர்வுகளை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். அரசின் இத்தகைய முடிவு மாணவர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!