நவம்பர் 1-ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் வகுப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் அறிவிப்பு வெளியாகும்
பிரிகேஜி ,எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பதாக அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்து தெளிவான ஒரு அறிக்கையை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!