மாணவர்கள் பள்ளி செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பது பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அறிவிப்பு:
நவம்பர் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1-ந்தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
9 முதல் 12ம் வகுப்புகளில் சில மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் அடுத்தகட்டமாக 6, 7, 8 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாம்.
பள்ளிகள் திறப்பு:
ஒரே நேரத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு திறந்தால் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவது கடினம் என தெரிவித்து உள்ளனர். ஒரு சில பெற்றோர்கள், அரசின் முடிவை ஏற்றுக் கொண்டு உள்ளனர்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!